இந்தியப் படைகளின் தளகர்த்தர் ஹெலிக்கொப்ரர் விபத்தில் பலி!

இந்தியப் படைகளின் தளகர்த்தர்
ஹெலிக்கொப்ரர் விபத்தில் பலி!

தமிழ்நாடு குன்னூரில் அனர்த்தம்

இந்தியப் படைகளது தலைமைத் தளபதி
(Chief of Defence Staff) ஜெனரல் பிபின் ராவத் (Bipin Rawat) அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்த ஹொலிக்
கொப்ரர் ஒன்று தமிழ்நாடு குன்னூரில்
விபத்துக்குள்ளாகியிருக்கிறது.அதில்
அவர், அவரது மனைவி உட்பட 12 பேர்
உயிரிழந்தனர் என அறிவிக்கப்படுகிறது.

தளபதியையும் வேறு சில படை உயர் அதிகாரிகளையும் ஏற்றிச் சென்ற விமானப்படையின் எம்ஐ-17(Mi-17V5) ரகக் ஹெலிக்கொப்ரரே தமிழ்நாட்டின் சூலூர் வான்படைத் தளத்தில் இருந்து
வெலிங்டனில் உள்ள இராணுவத் தளம்
ஒன்றுக்குச் செல்கையில் வழியில் விபத்
துக்குள்ளாகியிருக்கிறது.

ஹெலிக்கொப்ரர் திடீரெனத் தீப்பற்றி
அதிலிருந்து சிலர் எரிந்த நிலையில் கீழே வீழ்ந்ததைக் கண்டதாகக் கிராம வாசிகள் சிலர் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்
பதாக இந்திய விமானப்படை தெரிவித்
துள்ளது.

63 வயதான தளபதி ராவத் படைத்துறை
யில் 41 ஆண்டுகள் சேவையாற்றியவர் . இராணுவத்தின் தளபதியாக இருந்த அவர் 2019 இல் இந்தியாவின் முதலாவது படைகளது பிரதம தலைமை அதிகாரி
யாக (Chief of DefenceStaff) நியமிக்கப்பட்
டிருந்தார். 1978 ஆம் ஆண்டு இரண்டா
வது லெப்டினன்டாக இராணுவத்தில்
இணைந்த ராவத், ஜம்மு காஷ்மீர் மற்றும்
சீன எல்லைப்பகுதி படை நடவடிக்கைகள்
பலவற்றுக்குத் தலைமை வகித்தவர்.

இந்தியப் படைத் துறைக் கட்டமைப்பில்
முப் படைகளுக்கும் பொறுப்புவாய்ந்த
“படைகளின் பிரதம அதிகாரி” (Chief of Defence Staff) என்னும் பதவி முன்னர்
இருக்கவில்லை. பிரதமர் நரேந்திர
மோடியே அதனை உருவாக்கித் தனக்கு
மிக நெருக்கமானவரான ஜெனரல்
ராவத்தை அப் பதவியில் அமர்த்தியிருந்
தார்.

இறந்தவர்கள், காயமடைந்தவர்களது
உடல்கள் எரிந்து அடையாளம் தெரியாத
நிலையில் மீட்கப்பட்டதால் தளபதி ராவத்
தின் மரணத்தை அறிவிப்பதற்கு சில மணி நேர தாமதம் ஏற்பட்டது.நாட்டின் மூத்த படைத் தளகர்த்தர் விபத்தில் சிக்கியமை பற்றிய தகவலை
-இராணுவ நெறி முறைகளின் படி – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) முதலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவித்தார்.பின்னராக அவர் நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்கவி
ருந்தார்.அதற்கு முன்பாக அமைச்சர்
பிபின் ராவத்தின் இல்லத்துக்குச் சென்று
உறவினர்களை நேரில் சந்தித்தார்.

தளபதியின் மறைவுக்கு இந்தியத் தலை
வர்கள் அனுதாபம் தெரிவித்துவருகின்
றனர்.
குமாரதாஸன். பாரிஸ்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net