அம்பாறை கல்முனை பிரதேசத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வு.

அம்பாறை கல்முனை பிரதேசத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வு.

கரையோர மாவட்டங்களில் ஈரமல்லா பேரலையின் கோரப்பசிக்கு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்ட நினைவு நாள் இன்றாகும்

சுனாமி எனும் ஆழிப்பேரலையால் உயிர் நீத்த 14ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

கல்முனை

கல்முனை பிரதேசத்தின் சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 8:50 மணியளவில் ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் உயிரிழந்தோரின் உறவுகளால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த அஞ்சலி நிகழ்வு கல்முனை ஷைனிங் விளையாட்டு கழகத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

கல்முனை பிரதேசத்தில் 1650 மேற்பட்ட உயிர்கள் 2004ஆம் ஆண்டு சுனாமியால் காவு கொள்ளப்பட்டிருந்தனர்.

இந்த நினைவஞ்சலியில் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் ஜே.கே.அதிசயராஜ், கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.ராஜன் மற்றும் உயிர் நீத்தவர்களின் உறவுகளும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Copyright © 1582 Mukadu · All rights reserved · designed by Speed IT net