வடக்கில் வாழும் மலையக மக்கள் புறந்தள்ளப்படுகிறார்கள்!

வடக்கில் வாழும் மலையக மக்கள் புறந்தள்ளப்படுகிறார்கள்!

வடக்கில் வாழும் மலையக வம்சாவளி மக்களுக்கு அரசியல், பொருளாதார ரீதியாக சம அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தேசிய முற்போக்கு கழகத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

இதன் போதே வடக்கில் வாழும் மலையக வம்சாவளி மக்களுக்கு அரசியல், பொருளாதார ரீதியாக சம அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என கூறினார்.

அத்தோடு அவர்கள் சில அரசியல் காரணங்களுக்காக புறந்தள்ளப்படுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

மேலும் இங்கிருக்கும் அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் அவர்களுக்கான காணி உரிமைகளை வழங்கும் செயற்பாட்டில், மெத்தனப்போக்கை கடைபிடிக்கின்றார்கள் என கூறினார்.

இந்நிலையில் வடக்கு தமிழர்கள் அவர்களை இணைத்துக்கொள்வதற்கு நேசக்கரம் நீட்ட வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net