இரணைமடுவுக்கு ஜனாதிபதி திடீர் விஜயத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

இரணைமடுவுக்கு ஜனாதிபதி திடீர் விஜயத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி இரணைமடுவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகளை திறக்கும் பொருட்டு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் மாகாண மற்றும் மாவட்ட உயரதிகாரிகள் எவரும் இதனை உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை.

ஆனாலும் இன்றைய தினம் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ்மா அதிபர் கேபி மகிந்த குணரட்ன, கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக இரணைமடு குளத்திற்கு சென்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net