சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது

eleven_CIசீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது. அனர்த்தம் காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை ஆறு எனவும், சுமார் 200,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர். சீரற்ற காலநிலை காரணமாக 19 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மழை வெள்ளம் காரணமாக 134406 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net